வண்ணக்குடங்கள் வரிசையில் காத்திருக்க..
தண்ணீரின்றி மக்களெல்லாம்
தவித்திருக்க..
மூன்றில் ஒருபகுதி உலகு
தண்ணீரால் சூழ்ந்திருக்க..
மூன்றாம் உலகப்போர் குடி
தண்ணீருக்காக எனும் நிலை.
அனல் கக்கும் ஆதவன்
அழியும் விவசாயம்
வறண்ட பூமி..
வற்றிப்போன குளம் குட்டைகள் ..
வான் பொய்த்தது ஏனோ
வருண பகவானே ?
மரங்கள் வெட்டப்பட்டதால்
மனம் வெறுத்தாயா ?
ஏரி குளமெல்லாம்
எட்டடுக்காக மனைகளானது
ஏமாற்றமா ?
கருணை காட்டு வருணா!
குளம் குட்டைகளை
தூர்வாரி வைக்கிறோம் !
மரக் கன்றுகளை நட்டு
மழைநீருக்கு தவமிருக்கிறோம் !
வந்து பெய்து விடு
வான் மழையே !
– திரு.ரா.முருகேசன்